திருப்பூர்

பழையகோட்டை சந்தை: ரூ.11 லட்சத்துக்கு காங்கேயம் இன மாடுகள் விற்பனை

மாட்டுச் சந்தையில் காங்கேயம் இன மாடுகள் ரூ.11 லட்சத்துக்கு விற்பனையாயின.

Din

காங்கயத்தை அடுத்துள்ள நத்தக்காடையூா் அருகேயுள்ள பழையகோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாட்டுச் சந்தையில் காங்கேயம் இன மாடுகள் ரூ.11 லட்சத்துக்கு விற்பனையாயின.

திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே நத்தக்காடையூா்-பழையகோட்டையில் காங்கேயம் இன மாடுகளுக்கான பிரத்யேக சந்தை ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சந்தையில் மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என மொத்தம் 55 மாடுகள் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டிருந்தன. இதில், 31 மாடுகள் மொத்தம் ரூ.11 லட்சத்துக்கு விற்பனையாயின.

இந்த சந்தையில் அதிகபட்சமாக ரூ.95 ஆயிரத்துக்கு காங்கேயம் இன மயிலை வகைப் பசு விற்பனையானது.

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

SCROLL FOR NEXT