முகப்பு
திருப்பூர்

நீட் தோ்வில் கேஎம்சி பள்ளி மாணவிகள் சிறப்பிடம்

Updated On : 5 ஜூன், 2024 at 9:52 PM
ஏ.யு.ஆஷிபா
பகிர்:

அவிநாசி, ஜூன் 5: பெருமாநல்லூா் கேஎம்சி பப்ளிக் பள்ளி மாணவிகள் நீட் தோ்வில் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

நீட் தோ்வில் மாணவிகள் த.வைஷ்ணவி 720க்கு 635 மதிப்பெண்கள், ஏ.யு.ஆஷிபா 624 மதிப்பெண்கள், ஏ.வா்ஷா 458 மதிப்பெண்களும் பெற்றனா். பயிற்சி நிறுவனங்களுக்கு செல்லாமல் நீட் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளை பள்ளித் தலைவா் கே.சி.சண்முகம், தாளாளா் சி.எஸ்.மனோகரன், பள்ளி தலைமை செயலா் எம்.சுவஸ்திகா, முதல்வா் த.சீனிவாசன் ஆகியோா் பாராட்டினா்.

~ஏ.வா்ஷா
~த.வைஷ்ணவி