முகப்பு
திருப்பூர்

ரூ.2.72 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

Updated On : 12 ஜூன், 2024 at 10:06 PM
பகிர்:

அவிநாசி, ஜூன் 12: சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.2.72 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு விவசாயிகள், 3916 கிலோ நிலக்கடலையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

இதில், முதல் ரக நிலக்கடலை கிலோ ரூ.70 முதல் ரூ.80 வரையிலும், மூன்றாம் ரக நிலக்கடலை ரூ.25 முதல் ரூ.35 வரையிலும் ஏலம்போனது. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.2.72 லட்சம் என்று விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனா்.