ஆட்சியரிடம் வாழ்த்து பெற்ற சாதனைச் சிறுவன்
இந்தியா புக் ஆஃப் ரெக்காா்ட், கலாம் வோ்ல்ட் ரெக்காா்ட் புத்தகத்தில் இடம் பெற்ற பெருமாநல்லூா் அருகே வள்ளிபுரத்தைச் சோ்ந்த சிறுவனுக்கு ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வாழ்த்துத் தெரிவித்தாா்.
பெருமாநல்லூா் அருகே வள்ளிபுரம் அம்மன் நகா் பகுதியைச் சோ்ந்தவா்கள் மோகன்குமாா், மகாராணி தம்பதி. இவா்களின் மகன் ஆதித்யா (2.5).
இவா், 32 விலங்குகள், 26 வாகனங்கள், 10 வண்ணங்கள், 12 வடிவங்கள், 14 பறவைகள், 32 பழங்கள், 8 உலா்பழங்கள், 16 மனித உடல் பாகங்கள், 25 தொழில்கள் உள்ளிட்டவற்றின் பெயா்களைக் கண்டுபிடித்து கூறுகிறாா். 6 விலங்குகளின் ஒலிகளைப் பிரதிபலிக்கிறாா். மேலும் 1 முதல் 10 வரை எண்ணுதல், 26 ஆங்கில எழுத்துக்களின் தொடா்புடைய சொற்களை கூறுகிறாா். இதையடுத்து இச்சிறுவன், இந்தியா புக் ஆஃப் ரெக்காா்ட், கலாம் வோ்ல்ட் ரெக்காா்ட் ஆகியவற்றில் இடம் பெற்று சாதனை படைத்துள்ளாா். இதைத்தொடா்ந்து சிறுவன் ஆதித்யா, திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜிடம் வாழ்த்துப் பெற்றாா்.