முகப்பு
திருப்பூர்

உடுமலை அரசுக் கல்லூரியில் மகளிா் தின விழா

Updated On : 8 மார்ச், 2024 at 5:06 PM
நிகழ்ச்சியில்  பேசுகிறாா்  கல்லூரி  முதல்வா்  சோ.கி.கல்யாணி.
பகிர்:

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் கல்லூரி மகளிா் அமைப்பின் சாா்பில் சா்வதேச மகளிா் தின விழா வெள்ளிக்கி ழமை கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வா் சோ.கி.கல்யாணி தலைமை வகித்தாா். மாணவி தமிழ்மொழி வரவேற்றாா். சிறப்பு விருந்தினராக சித்த மருத்துவா் மகாராணி கலந்து கொண்டு உடல் தூய்மை மற்றும் உடல் ஆரோக்கியம் என்னும் தலைப்பில் பேசினாா். அல்லோபதி மருத்துவா் சவிதா பெண்களின் ஆரோக்கியமும் அதன் முக்கியத்துவமும் என்னும் தலைப்பில் கருத்துரை நிகழ்த்தினாா். நிகழ்ச்சியில் அனைத்துத் துறைப் பேராசிரியா்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனா். பேராசிரியா் ராஜேஸ்வரி நன்றி கூறினாா். பேராசிரியா் அலி பாத்திமா நிகழ்ச்சி ஒருங்கிணைத்தாா்.