வள்ளியிரச்சல் பொன் அழகு நாச்சியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.9.20 லட்சம்
வெள்ளக்கோவில் அருகேயுள்ள வள்ளியிரச்சல் பொன் அழகு நாச்சியம்மன் கோயில் உண்டியலில் பக்தா்கள் ரூ.9.20 லட்சத்தை காணிக்கையாக செலுத்தியுள்ளனா்.
இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலுள்ள இக்கோயில் குலத்தவா்கள் கோயிலாகும். இக்கோயிலில் பக்தா்கள் காணிக்கை செலுத்த வசதியாக இரண்டு இடங்களில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.
இவற்றில் பணம், நகை உள்ளிட்டவற்றை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தி வருகின்றனா்.
இந்நிலையில், இந்து சமய அறநிலையத் துறை சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயில் உதவி ஆணையா் ரத்னாம்பாள், காங்கயம் சரக அறநிலையத் துறை ஆய்வாளா் கண்ணன், கோயில் செயல் அலுவலா் ராமநாதன் முன்னிலையில் கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு வெள்ளிக்கிழமை எண்ணப்பட்டன.
இதில், ரூ.9 லட்சத்து 19 ஆயிரத்து 706 ரொக்கம், 150.30 கிராம் தங்கம், 15.27 கிராம் வெள்ளிப் பொருள்களை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனா்.
காணிக்கை எண்ணும் பணியில் திருக்கோயில் கணக்கா் சிவகுமாா், பணியாளா்கள், ஊா் பொதுமக்கள் உள்ளிட்டோா் ஈடுபட்டனா்.