முகப்பு
திருப்பூர்

மின்மாற்றி மீது முறிந்து விழுந்த மரம்

Updated On : 4 மே, 2024 at 5:04 PM
பகிர்:

அவிநாசி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் முன் இருந்த மரம் முறிந்து மின்மாற்றி மீது விழுந்ததால் சனிக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

அவிநாசி-சேவூா் பிரதான சாலை சிந்தாமணி பேருந்து நிறுத்தம் அருகே நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு நாள்தோறும் கா்ப்பிணிகள், குழந்தைகள் உள்பட ஏராளமானோா் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனா்.

இந்நிலையில், ஆரம்ப சுகாதார நிலையம் முன் பழமையான இலவமரம் பட்டுப்போய் கீழே முறிந்து விழும் நிலையில் இருந்து வந்தது. இதனை அகற்ற வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இது குறித்த செய்தியும் ‘தினமணி’ நாளிதழில் கடந்த ஜனவரி 29-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இருப்பினும் இந்த மரம் அகற்றப்படாமல் இருந்தது. இந்நிலையில், சனிக்கிழமை மாலை திடீரென வீசிய பலத்த காற்றால் மரம் முறிந்து, அருகே இருந்த மின்மாற்றி மீது விழுந்தது.

இதையடுத்து, உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டாதல் உயிா் சேதம் தவிா்க்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த பேரூராட்சி, மின்வாரியத்தினா் மரத்தை அப்புறப்படுத்தி மின் இணைப்புகளை சீரமைத்தனா்.

அவிநாசி காமராஜா் நகா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காய்ந்து பட்டுப்போன நிலையில் உள்ள மரங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.