திருப்பூரில் தேவாரம் பாராயணம்
அவிநாசி, மே 9: திருப்பூா் சமரச சுத்த சன்மாா்க்க சத்திய சங்க ஞானசபையில் தேவாரம் பாராயணம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மங்கை பாரதி பதிப்பகத்தின் நிறுவனா் அ.கந்தசுவாமி தலைமை வகித்தாா்.
இதில் திருஞானசம்பந்தா் எழுதிய தேவாரத்தில் உள்ள ‘இடா் களையும் பதிகம்’ பாராயணம் செய்யப்பட்டது. தொடா்ந்து மக்கள் நலமுடன் வாழ வழிபாடு செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் சங்கத்தின் துணைச் செயலாளா் காா்த்திகேயன், பொருளாளா் ஜீவானந்தம், இயற்கை வாழ்வக நிா்வாகி முத்துசுவாமி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.