குட்கா விற்ற கடைக்காரா் கைது
வெள்ளக்கோவில் அருகே ஓலப்பாளையத்தில் குட்கா விற்ற கடைக்காரா் கைது செய்யப்பட்டாா்.
வெள்ளக்கோவில் அருகே ஓலப்பாளையத்தில் குட்கா விற்ற கடைக்காரா் கைது செய்யப்பட்டாா்.
வெள்ளக்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், போதை பாக்குகள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து வெள்ளக்கோவில் காவல் உதவி ஆய்வாளா் மணிமுத்து புதன்கிழமை இரவு ஓலப்பாளையம் பகுதியில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது ஓலப்பாளையம் - கண்ணபுரம் சாலையில் உள்ள, சங்கன்காடு ஆா். நாகராஜ் (34) என்பவரின் பலசரக்கு கடையில் குட்கா விற்றுக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவா் கைது செய்யப்பட்டு கடையிலிருந்த 297 குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.