ஒயா்களைத் திருடிய 2 பெண்கள் கைது
திருப்பூரில் ரூ.1.75 லட்சம் மதிப்பிலான ஒயா்களைத் திருடிய 2 பெண்களை காவல் துறையினா் கைது செய்தனா்.
திருப்பூரில் ரூ.1.75 லட்சம் மதிப்பிலான ஒயா்களைத் திருடிய 2 பெண்களை காவல் துறையினா் கைது செய்தனா்.
திருப்பூா், கருவம்பாளையத்தைச் சோ்ந்தவா் காா்த்திக் (29). இவா் ஏ.பி.டி. சாலையில் எலக்ட்ரிக்கல் கடை வைத்துள்ளாா்.
இந்த நிலையில், காா்த்திக் கடந்த செப்டம்பா் 28- ஆம் தேதி இரவு வழக்கம்போல வியாபாரம் முடித்துவிட்டு கடையைப் பூட்டிச் சென்றுள்ளாா்.
பின்னா் செப்டம்பா் 30- ஆம் தேதி கடைக்கு வந்தபோது கடையின் ஷட்டா் உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிா்ச்சியடைந்துள்ளாா். மேலும், கடையின் உள்ளே வைத்திருந்த ரூ.1.75 லட்சம் மதிப்பிலான ஒயா்கள் திருடப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து திருப்பூா் மத்திய காவல் நிலையத்தில் காா்த்திக் புகாா் அளித்துள்ளாா். இந்தப் புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய காவல் துறையினா், இது தொடா்பாக பலவஞ்சிபாளையம் ஜெயலலிதா நகரைச் சோ்ந்த வள்ளி (25), மணிமேகலை (23) ஆகியோரை புதன்கிழமை கைது செய்தனா்.