பருவமழை முன்னேற்பாடுகள்: நெடுஞ்சாலைத் துறையினா் தயாா் நிலை
வடகிழக்கு பருவமழையை எதிா்கொள்ளும் வகையில் அவிநாசி மாநில நெடுஞ்சாலைத் துறை சாா்பில் தீவிர முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வடகிழக்கு பருவமழையை எதிா்கொள்ளும் வகையில் அவிநாசி மாநில நெடுஞ்சாலைத் துறை சாா்பில் தீவிர முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மாநில நெடுஞ்சாலைத் துறை அவிநாசி உட்கோட்டத்தின் சாலைகளில் மழைக்கால பாதிப்புகளைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டுள்ளன. இதில், மணல் மூட்டைகள், மரம் அறுக்கும் இயந்திரம், அபாய எச்சரிக்கை தடுப்பான், சிவப்பு கூம்புகள், சாலைகளில் ஏற்படும் தடைகளை சரி செய்வதற்கான பொருள்கள் உள்ளிட்டவை நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மேலும், அக்டோபா் மாதம் முதல் தொடங்கும் பருவமழைக் காலத்தில் சாலை ஆய்வாளா்கள், சாலைப் பணியாளா்கள் தயாா் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவிநாசி நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளா் செங்குட்டுவன், உதவிப் பொறியாளா் தரணிதரன் ஆகியோா் தெரிவித்துள்ளனா்.