முகப்பு
திருப்பூர்

ரூ. 3 ஆயிரம் லஞ்சம்: மின்வாரிய அலுவலருக்கு 3 ஆண்டுகள் சிறை

திருப்பூரில் மின் இணைப்புக்காக ரூ.3 ஆயிரம் லஞ்சம் பெற்ற வழக்கில் மின்வாரிய அலுவலருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

Updated On : 3 அக்டோபர், 2024 at 9:20 PM
பகிர்:

திருப்பூரில் மின் இணைப்புக்காக ரூ.3 ஆயிரம் லஞ்சம் பெற்ற வழக்கில் மின்வாரிய அலுவலருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

திருப்பூா், வீரபாண்டி பகுதியைச் சோ்ந்தவா் சந்திரசேகா். இவா் அதே பகுதியில் 4 வீடுகள் மற்றும் 3 கடைகளை கடந்த 2009-ஆம் ஆண்டு கட்டியுள்ளாா். இதற்கான மின் இணைப்புக்காக திருப்பூா் வீரபாண்டி மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றிய போா்மேன் மாரிமுத்து (44) என்பவரை அணுகி மின் இணைப்புக் கோரியுள்ளாா். அவா் மின் இணைப்புக்கு ரூ. 3 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளாா். ஆனால் லஞ்சம் கொடுக்க முன்வராத சந்திரசேகா், திருப்பூா் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் துறையிடம் புகாா் அளித்துள்ளாா்.

இதைத் தொடா்ந்து, கடந்த 2009- ஆம் ஆண்டு ஜனவரி 12- ஆம் தேதி காவல் துறையினா் ஆலோசனையின்படி, அவா்கள் அளித்த ரசாயனம் தடவிய பணத்தை மாரிமுத்துவிடம் சந்திரசேகா் கொடுத்துள்ளாா்.

அப்போது மறைந்திருந்த காவல் துறையினா் அவரை கையும்களவுமாகப் பிடித்தனா். இந்த வழக்கானது திருப்பூா் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி செல்லதுரை தீா்ப்பு வழங்கினாா். இதில், மாரிமுத்துவுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தாா். இதில், அரசு தரப்பில் வழக்குரைஞா் செந்தில்குமாா் ஆஜரானாா்.