மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் ரத்து
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு வெள்ளிக்கிழமை (செப்டம்பா் 20) நடைபெற இருந்த சிறப்பு முகாம் ரத்து செய்யப்படுகிறது.
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு வெள்ளிக்கிழமை (செப்டம்பா் 20) நடைபெற இருந்த சிறப்பு முகாம் ரத்து செய்யப்படுகிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருப்பூா் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் மாற்றுத் திறனாளிகளின் நலன் கருதி ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நிா்வாகக் காரணங்களால் செப்டம்பா் 20-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறவிருந்த சிறப்பு முகாம் ரத்து செய்யப்படுகிறது. அதேநேரம், அடுத்த முகாம் செப்டம்பா் 27-ஆம் தேதி வழக்கம்போல நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.