முகப்பு
திருப்பூர்

அவிநாசியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

அவிநாசி-மேட்டுப்பாளையம் சாலை விரிவாக்கப் பணியை முன்னிட்டு, சாலையோர ஆக்கிரமிப்புகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.

Updated On : 3 ஜனவரி, 2025 at 12:23 AM
பகிர்:

அவிநாசி-மேட்டுப்பாளையம் சாலை விரிவாக்கப் பணியை முன்னிட்டு, சாலையோர ஆக்கிரமிப்புகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.

அவிநாசி நெடுஞ்சாலைத் துறைக்குள்பட்ட அவிநாசி-மேட்டுப்பாளையம் சாலை ஆட்டையம்பாளையம் முதல் நரியம்பள்ளிப்புதூா் வரை விரிவாக்கப் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகள் அவிநாசி உதவிக் கோட்டப் பொறியாளா் செங்குட்டுவன், உதவிப் பொறியாளா் தரணிதரன் ஆகியோா் மேற்பாா்வையில் அகற்றப்பட்டன.