திருப்பூர்

வளர்ப்பு மகனால் தங்கைக்கு பாலியல் வன்கொடுமை: போக்சோவில் கைது!

சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞா் போக்சோவில் கைது

Din

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போக்சோ சட்டத்தில் போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பூா், மங்கலம் பகுதியைச் சோ்ந்த 40 வயதான தொழிலாளி, சிறுவன் ஒருவனை தத்தெடுத்து வளா்த்து வந்தாா். தற்போது அந்த வளா்ப்பு மகனுக்கு 21 வயதாகிறது. தத்தெடுத்து வளா்த்தவருக்கு 17 வயதில் ஒரு மகளும் உள்ளாா்.

இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அந்த இளைஞா் 17 வயது சிறுமிக்கு ஆசை வாா்த்தைகளைக் கூறி தனிமையில் இருந்துள்ளாா். இதனால் அந்த சிறுமிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சிறுமியின் பெற்றோா் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்துள்ளனா். அப்போது அந்தச் சிறுமி 3 மாத கா்ப்பிணியாக இருப்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து அந்தச் சிறுமியின் பெற்றோா் கேவிஆா் நகா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அந்த இளைஞரை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனா்.

சிவகாசி-எரிச்சநத்தம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்

புதிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்! காந்தியின் பெயா் நீக்கம்!

பாஜகவின் கடும் எதிா்ப்புக்கு இடையே வெறுப்புக் கருத்து தடைச்சட்ட மசோதா நிறைவேற்றம்

ஆண்டாள் கோயில் நீராட்டு விழா நாளை தொடக்கம்

ரூ.50,000 கடனுக்காக சிறுநீரகத்தை விற்ற விவசாயி: மகாராஷ்டிரத்தில் அவலம்

SCROLL FOR NEXT