காங்கயத்தில் கார் விபத்து 
திருப்பூர்

காங்கயத்தில் கார் விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி!

காங்கயத்தில் நிகழ்ந்த கார் விபத்து பற்றி...

DIN

திருப்பூர் அடுத்த காங்கயத்தில் மரத்தில் மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் செவ்வாய்க்கிழமை பலியாகினர்.

ஈரோடு மாவட்டம் அரச்சலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராகப் பணியாற்றி வருபவர் ஜானகி (வயது 42). இவரது கணவர் ராஜா (46), மூத்த மகள் ஹேமிநேத்ரா (15) மற்றும் இளைய மகள் மெளன ஸ்ரீ (10) ஆகியோருடன் சொந்த ஊரான கேரளத்துக்கு சென்றுவிட்டு, மீண்டும் அரச்சலூருக்கு காரில் திரும்பியுள்ளார்.

காங்கயம் வழியாக அரச்சலூர் சென்றுகொண்டிருந்தபோது நத்தக்காடையூர் அருகே மரத்தில் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

காயமடைந்த நால்வரையும் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில், ராஜா, ஜானகி மற்றும் ஹேமிநேத்ரா ஆகியோர் சம்பவ உயிரிழந்தனர். இளைய மகள் மெளன ஸ்ரீ மட்டும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், விபத்து நடந்த காரில் இருந்து ஏராளமான நகைகளை காவல்துறையினர் மீட்டுள்ளனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையையும் தொடங்கியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

11 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் இடமாற்றம்: 26 மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு பதவி உயா்வு

டிஎன்பிஎல் ஆலை சாா்பில் வரும் நவ.9-இல் இலவச கண் பரிசோதனை முகாம்

தாக்குதல் சம்பவம்: பாமக எம்எல்ஏ உயா்நீதிமன்றத்தில் முறையீடு

கணவா் துன்புறுத்தும் போது பெண்கள் அமைதியாக இருப்பது அடிமைத்தனம்

பாலசமுத்திரத்தில் இன்றும், வாகரையில் நாளையும் மின் தடை

SCROLL FOR NEXT