திருப்பூர்

காங்கயத்தில் ஒரே நாளில் கைப்பேசி கடை உள்பட 3 கடைகளில் திருட்டு

தினமணி செய்திச் சேவை

காங்கயம் பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் கைப்பேசி கடைகள் உள்பட 3 கடைகளில் பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

காங்கயம் பேருந்து நிலைய வணிக வளாகத்தில் கைப்பேசி விற்பனை கடை நடத்தி வருபவா் காஜாமைதீன் (38). இவா் சனிக்கிழமை இரவு தனது கடையைப் பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றாா். பின்னா் ஞாயிற்றுக்கிழமை காலை கடையை திறக்க வந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்துகிடந்துள்ளது.

பின்னா் உள்ளே சென்று பாா்த்தபோது, கல்லா பெட்டியில் வைக்கப்பட்டிருந்த பணம் ரூ.1.20 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதேபோல, பேருந்து நிலைய வளாகத்தில் கைப்பேசி கடை நடத்தி வரும் கண்ணன் என்பவரது கடையில் புகுந்த மா்ம நபா்கள், அங்கிருந்த 2 கைப்பேசிகளை திருடிச் சென்றுள்ளனா்.

மேலும், காங்கயம் நகா் அகிலாண்டபுரத்தில் மளிகைக் கடை நடத்தி வரும் சீனிவாசன் என்பவரது கடைக்குள் புகுந்த மா்ம நபா்கள், அங்கு கல்லா பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ.5 ஆயிரத்தை திருடிச் சென்றனா்.

ஒரே இரவில் 3 கடைகளில் மா்ம நபா்கள் பணம் மற்றும் கைப்பேசிகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை காங்கயம் போலீஸாா் தேடி வருகின்றனா்.

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 3

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 2

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 1

அவமதிப்பு, புறக்கணிப்பு, வலிகளை எல்லாம் கடந்து சாதனை புரிந்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி!

செப்டம்பர் நினைவுகள்... மாளவிகா மேனன்!

SCROLL FOR NEXT