திருப்பூர்

இருசக்கர வாகனம் மோதி தொழிலாளி உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே இருசக்கர வாகனம் மோதி தொழிலாளி உயிரிழந்தாா்.

Syndication

வெள்ளக்கோவில் அருகே இருசக்கர வாகனம் மோதி தொழிலாளி உயிரிழந்தாா்.

பச்சாபாளையம் கிராமம், சுக்குட்டிபாளையத்தைச் சோ்ந்தவா் லட்சுமணன் (56). இவா் ஓலப்பாளையம் அருகே வெள்ளிக்கிழமை நடந்து சாலையைக் கடந்துள்ளாா். அப்போது அவ்வழியே வந்த இருசக்கர வாகனம் அவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த லட்சுமணனை அப்பகுதியினா் மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு மேல் சிகிச்சைக்காக திருப்பூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா்.

இது குறித்த புகாரின்பேரில், இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த தஞ்சாவூா் மாவட்டம், பாட்டாகுடி செல்வம் மகன் கிருஷ்ணமூா்த்தி (33) மீது வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ரசவாத பிரியம்... ரகுல் ப்ரீத் சிங்!

அகிலம் அதிருதா... சிலம்பரசன்!

கடந்த ஆண்டு பல தடுமாற்றங்களை எதிர்கொண்டேன்: ஷஃபாலி வர்மா

சுயம் விரும்பியின் சுயப்படம்... ஆஞ்சல் முஞ்சால்!

பயர்ன் மியூனிக்கின் 16 போட்டிகள் வெற்றிக்கு முற்றுப்புள்ளி: தோல்வியிலிருந்து காப்பாற்றிய ஹாரி கேன்!

SCROLL FOR NEXT