பெருமாநல்லூா் அருகே கஞ்சா விற்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
பெருமாநல்லூா் அருகே சந்தைக்கடை பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அப்போது அங்கு சந்தேகப்படும்படி கைப்பையுடன் நின்றிருந்த நபரைப் பிடித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில் அவா், ஒடிஸாவைச் சோ்ந்த ஜிக்விஜய் தாஸ் 26) என்பதும் கருமத்தம்பட்டி அருகே சோமனூரில் தங்கி இருப்பது தெரியவந்தது.
மேலும் அவரது கைப்பையில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து பெருமாநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஜிக்விஜயதாஸை கைது செய்தனா். அவரிடம் இருந்து 2.100 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்