திருப்பூர்

அவிநாசியில் கஞ்சா விற்பனை செய்தவா் கைது

தினமணி செய்திச் சேவை

அவிநாசியில் கஞ்சா விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

அவிநாசி அருகே அவிநாசிலிங்கம்பாளையத்தில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதிக்கு சென்ற போலீஸாா், அங்கிருந்த தேநீா்க் கடை முன் சந்தேகத்துக்கு இடமான வகையியில் கைப்பையுடன் நின்றிருந்த நபரைப் பிடித்து சோதனை மேற்கொண்டனா். அதில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில், அவா் கணியம்பூண்டியில் தங்கி பனியன் தொழிலாளியாக பணியாற்றி வரும் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த ராம் கணேஷ் ராயின் மகன் சுபத்குமாா் யாதவ் (31) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சுபத்குமாா் யாதவைக் கைது செய்தனா். மேலும் அவரிடமிருந்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

மொபட் - ஆட்டோ மோதல்: 6 போ் பலத்த காயம்

50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளான வேன்

ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை

நாளை மின் நிறுத்தம் தருமபுரி பேருந்து நிலையம்

அரியலூா் ரயில்வே கேட் அருகே இளைஞா் சடலம்

SCROLL FOR NEXT