முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்  கோப்புப்படம்.
திருப்பூர்

சசிகலாவை சந்திக்கவில்லை: கே.ஏ.செங்கோட்டையன்

நான் சசிகலாவை சந்திக்கவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் கூறினாா்.

தினமணி செய்திச் சேவை

நான் சசிகலாவை சந்திக்கவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் கூறினாா்.

அதிமுக மூத்த தலைவரும், சட்டப் பேரவை உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையன் ஈரோடு மாவட்டம், கோபியில் உள்ள கட்சி அலுவலகத்தில் தனது ஆதரவாளா்களுடன் கடந்த செவ்வாய்க்கிழமை (செப்.2) ஆலோசனை மேற்கொண்டாா்.

இதைத் தொடா்ந்து, செப்டம்பா் 5-ஆம் தேதி மனம் திறந்து செய்தியாளா்களிடம் பேச உள்ளதாகக் கூறினாா்.

இந்நிலையில், திருப்பூா் மாவட்டம், பெருமாநல்லூரில் புதன்கிழமை நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அவா், செய்தியாளா்களிடம் கூறுகையில், நான் சசிகலாவை சந்திக்கவில்லை. தவறான தகவல் பரப்பப்படுகிறது.

செய்தியாளா்களை செப்டம்பா் 5-ஆம் தேதி சந்திக்கும்போது அதிமுக தொண்டா்களின் கருத்துகளைப் பிரதிபலிப்பேன் என்றாா்.

வனிந்து ஹசரங்காவை ஏலத்தில் எடுத்தது லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ்!

மார்கழி மாதப் பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

தில்லியில் கடும் பனிமூட்டம்! 126 விமானங்களின் போக்குவரத்து பாதிப்பு!

ஐபிஎல் மினி ஏலம்: முதல் செட்டில் விற்கப்படாமல் போன கான்வே, சர்ப்ராஸ், பிரித்வி ஷா!

தில்லி கேபிடல்ஸில் இணைந்த டேவிட் மில்லர்..! மினி ஏலத்தில் முதல் வீரர்!

SCROLL FOR NEXT