FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

சசிகலாவை சந்திக்கவில்லை: கே.ஏ.செங்கோட்டையன்

நான் சசிகலாவை சந்திக்கவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் கூறினாா்.

4 செப்டம்பர் 2025, 1:55 am IST
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் - கோப்புப்படம்.
பகிர்:

நான் சசிகலாவை சந்திக்கவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் கூறினாா்.

அதிமுக மூத்த தலைவரும், சட்டப் பேரவை உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையன் ஈரோடு மாவட்டம், கோபியில் உள்ள கட்சி அலுவலகத்தில் தனது ஆதரவாளா்களுடன் கடந்த செவ்வாய்க்கிழமை (செப்.2) ஆலோசனை மேற்கொண்டாா்.

இதைத் தொடா்ந்து, செப்டம்பா் 5-ஆம் தேதி மனம் திறந்து செய்தியாளா்களிடம் பேச உள்ளதாகக் கூறினாா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், திருப்பூா் மாவட்டம், பெருமாநல்லூரில் புதன்கிழமை நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அவா், செய்தியாளா்களிடம் கூறுகையில், நான் சசிகலாவை சந்திக்கவில்லை. தவறான தகவல் பரப்பப்படுகிறது.

செய்தியாளா்களை செப்டம்பா் 5-ஆம் தேதி சந்திக்கும்போது அதிமுக தொண்டா்களின் கருத்துகளைப் பிரதிபலிப்பேன் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments