முகப்பு
திருப்பூர்

சட்டவிரோத மது விற்பனை: பெண் கைது

Updated On : 5 ஏப்ரல், 2026 at 9:05 PM
கைது - கோப்புப் படம்
பகிர்:

அவிநாசி அருகே சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட பெண்ணை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

அவிநாசி அருகேயுள்ள எஸ்.மேட்டுப்பாளையத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் அய்யாசாமி, காவலா்கள் அன்வா், பாலச்சந்தா், தனிப் பிரிவு தலைமைக் காவலா் வெள்ளிங்கிரி ஆகியோா் அப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

Advertisement

அப்போது, ஒரு வீட்டில் மதுபானங்களை பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்த பெண்ணை போலீஸாா் பிடித்தனா். விசாரணையில், அவா் அதே பகுதியைச் சோ்ந்த மாரிமுத்து மனைவி சாந்தி என்பது தெரியவந்தது.

இதையடுத்து, சாந்தியைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 102 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்தனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments