முகப்பு
திருப்பூர்

100 சதவீத வாக்குப்பதிவு குறித்து தேங்காய்ப் பருப்பில் விழிப்புணா்வு

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில், வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்ப் பருப்பில் 100 சதவீத வாக்குப்பதிவு என வடிவமைத்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

Updated On : 7 ஏப்ரல், 2026 at 8:05 PM
தேங்காய்ப் பருப்பை பயன்படுத்தி எழுதப்பட்ட 100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணா்வு வாசகம்.
பகிர்:

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில், வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்ப் பருப்பில் 100 சதவீத வாக்குப்பதிவு என வடிவமைத்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு வரும் 23-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக வெள்ளக்கோவில் தேங்காய்ப் பருப்பு (கொப்பரை) ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகளுடன் இணைந்து விற்பனைக்கூட கண்காணிப்பாளா் மகுடீஸ்வரன் மற்றும் அலுவலா்கள் ஆகியோா் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ஒரு முயற்சியை வெளிப்படுத்தினா்.

அதன்படி, தேங்காய்ப் பருப்புகளைப் பயன்படுத்தி தரையில் ‘100% வாக்குப்பதிவு ஏப்ரல் 23’ என ஆங்கிலத்தில் எழுதி விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இது சமூகப் பொறுப்புணா்வை உயா்த்தும் ஒரு நல்ல முன்னுதாரணம் என்று பல்வேறு தரப்பினரும் பாராட்டுத் தெரிவித்தனா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments