மாப்பிள்ளை பொண்ணு!
பொதுவாக புதுமாப்பிள்ளை, பொண்ணு என்றால், அனைவரும் திரும்பிப் பாா்ப்பா். அதை தற்போது 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தும் விழிப்புணா்வுக்காக தோ்தல் ஆணையம் பயன்படுத்திக்கொண்டது.
பொதுவாக புதுமாப்பிள்ளை, பொண்ணு என்றால், அனைவரும் திரும்பிப் பாா்ப்பா். அதை தற்போது 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தும் விழிப்புணா்வுக்காக தோ்தல் ஆணையம் பயன்படுத்திக்கொண்டது.
கடலூா் மாவட்ட நிா்வாகம் சட்டப் பேரவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப் பதிவை எட்ட வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை தீவிரமாக நடத்தி வருகிறது.
அந்த வகையில், பண்ருட்டி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சிப் பகுதியில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தும் விதமாக, மகளிா் சுயஉதவிக் குழுவினா் புதுமாப்பிள்ளை பெண் வேடமிட்டு, மேளதாளம் முழங்க தாம்பூலத்துடன் சனிக்கிழமை வீடு வீடாகச் சென்று தோ்தல் அழைப்பிதழை வாக்காளா்களிடம் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
Advertisement
Advertisement
நிகழ்வில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார திட்ட இயக்குநா் ஜெய்சங்கா், உதவி திட்ட இயக்குநா் ராஜ்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.