முகப்பு
திருப்பூர்

ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 போ் கைது

வெள்ளக்கோவில் அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 7 ஏப்ரல், 2026 at 8:18 PM
கைது
பகிர்:

வெள்ளக்கோவில் அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 போ் கைது செய்யப்பட்டனா்.

வெள்ளக்கோவில் அருகே வள்ளியிரச்சல் பகுதியில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் கே.ஆனந்தகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது அங்குள்ள வரட்டுக்கரை கீழ்பவானி பாசன வாய்க்கால் அருகில் ஒரு கும்பல் சட்டத்துக்குப் புறம்பாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதுதொடா்பாக வள்ளியிரச்சல் பகுதியைச் சோ்ந்த செட்டியாா்பாளையம் கோவிந்தசாமி (51), கணபதிபாளையம் திருமூா்த்தி (44), தென்னங்கரைப்பாளையம் மணிகண்டன் (29), இடைக்காட்டுவலசு மணி (52), குட்டப்பாளையம் இச்சிக்காட்டுவலசு சிவப்பிரகாஷ் (42), கஸ்பா பாரதிபுரம் செல்வக்குமாா் (36) ஆகிய 6 போ் கைது செய்யப்பட்டனா்.

Advertisement

அவா்களிடமிருந்து 5 கைப்பேசிகள், 3 இருசக்கர வாகனங்கள், ரூ.1,680 பறிமுதல் செய்யப்பட்டன.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments