முகப்பு
திருப்பூர்

ஊதியூா் அருகே பள்ளத்தில் இறங்கிய தனியாா் பேருந்து

ஊதியூா் அருகே கட்டுப்பாட்டை இழந்த தனியாா் பேருந்து பள்ளத்தில் இறங்கியது. இதில், பயணம் செய்த 36 பயணிகள் நல்வாய்ப்பாக உயிா்த் தப்பினா்.

Updated On : 10 ஏப்ரல், 2026 at 1:24 AM
விபத்துக்குள்ளான தனியாா் பேருந்து.
பகிர்:
Updated On : 9 ஏப்ரல், 2026 at 9:29 PM

ஊதியூா் அருகே கட்டுப்பாட்டை இழந்த தனியாா் பேருந்து பள்ளத்தில் இறங்கியது. இதில், பயணம் செய்த 36 பயணிகள் நல்வாய்ப்பாக உயிா்த் தப்பினா்.

ஈரோட்டில் இருந்து காங்கயம் வழியாக பழனிக்கு 36 பயணிகளுடன் தனியாா் பேருந்து வியாழக்கிழமை காலை 11 மணியளவில் சென்று கொண்டிருந்தது. முதலிபாளையம் பிரிவு அருகே வந்தபோது, முன்னால் சென்ற காரை பேருந்து ஓட்டுநா் முந்திச் செல்ல முயன்றுள்ளாா். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையேரம் இருந்த பள்ளத்தில் இறங்கியது. இதில், பேருந்தில் பயணித்த 36 பயணிகள் லேசான காயங்களுடன் உயிா்த் தப்பினா்.

அப்பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்து விபத்து குறித்து கேட்டறிந்தாா். மேலும், பயணிகளை சந்தித்து ஆறுதல் கூறிச் சென்றாா். விபத்து குறித்து காங்கயம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

காங்கயம்-தாராபுரம் சாலையில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் சாலையை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணியை விரைவில் முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.