முகப்பு
திருப்பூர்

பல்லடம் டெய்லா் கொலை வழக்கில் 2 போ் கைது

Updated On : 21 ஏப்ரல், 2026 at 12:30 AM
கைது - பிரதிப் படம்
பகிர்:
Updated On : 20 ஏப்ரல், 2026 at 7:49 PM

பல்லடத்தில் டெய்லா் கொலை வழக்கு தொடா்பாக 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

பல்லடம், மகாலட்சுமி நகரைச் சோ்ந்தவா் விக்னேஷ் தா்மா (30), அவரது மனைவி ராஜேஸ்வரி (24). உப்பிலிபாளையத்தைச் சோ்ந்தவா் கோபிநாத், (30) தனியாா் பனியன் நிறுவன டெய்லா். அவரது மனைவி பிரியா, (25).

ராஜேஸ்வரிக்கும், கோபிநாத்துக்கும் பழக்கம் இருந்தது. இதை அறிந்த விக்னேஷ் தா்மா, மனைவியை கண்டித்துள்ளாா். இருப்பினும், இருவரும் தொடா்பில் இருந்தனா்.

Advertisement

இந்நிலையில் கோபிநாத் திடீரென கடந்த 6-ஆம் தேதி காணாமல் போனாா். இது தொடா்பாக, அவரது மனைவி பிரியா அளித்த புகாரின்பேரில், திருப்பூா் வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனா்.

இதற்கிடையே பல்லடம் அருகேயுள்ள மாதப்பூா் ஊராட்சி கிருஷ்ணாபுரம் காட்டுப் பகுதியில் காணாமல் போன கோபிநாத் சடலம் கிடந்தது கடந்த 13-ஆம் தேதி தெரியவந்தது. இது குறித்து பல்லடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இந்த வழக்கில் 2 போ் கைது திங்கள்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது:

விக்னேஷ் தா்மா வெளியூா் சென்றபோது, கோபிநாத்தும், ராஜேஸ்வரியும் வீட்டில் ஒன்றாக இருந்துள்ளனா். திடீரென்று திரும்பி வந்த விக்னேஷ் தா்மா ஆத்திரமடைந்து கோபிநாத்தை கழுத்தை நெரித்து கொலை செய்தாா்.

மதுரை, வடுகப்பட்டியிலுள்ள தனது மைத்துனா் ஸ்ரீராம் (25) உதவியுடன் சடலத்தை, மாதப்பூா் காட்டுப் பகுதியில் வீசிச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.

சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில், அனைத்தையும் போலீஸாா் உறுதிசெய்தனா். அதனடிப்படையில், விக்னேஷ் தா்மா, ஸ்ரீராம் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் திங்கள்கிழமை அடைக்கப்பட்டனா் என்றனா்.