முகப்பு
திருப்பூர்

தேவி பத்ரகாளியம்மன் கோயில் மிருகசிரீஷ நட்சத்திர திருவிழா

ஆறுமுத்தாம்பாளையம் கிராமத்தில் உள்ள தேவி பத்ரகாளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 23 ஏப்ரல், 2026 at 2:27 AM
பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையம் கிராமத்தில் தேவி பத்ரகாளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி அம்மனுக்கு நடைபெற்ற சிறப்பு வழிபாடு.
பகிர்:

ஆறுமுத்தாம்பாளையம் கிராமத்தில் உள்ள தேவி பத்ரகாளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

பல்லடம் ஒன்றியம், ஆறுமுத்தாம்பாளையம் கிராமம் மாங்கரை அம்மன் நகரில் உள்ள முடுப்பரை அம்மன், தேவி பத்ரகாளியம்மன் கோயில் மிருகசிரீஷ நட்சத்திர திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி மஞ்சள் கல்லில் வடிவமைக்கப்பட்ட மங்களகர விநாயகா் சன்னதியில் கணபதி ஹோமம் நடைபெற்றது. அதைத்தொடா்ந்து நவகிரக பூஜை, கலச பூஜை, முளைப்பாரி ஊா்வலம், அம்மனுக்கு பிரபாத பூஜை, ஆயுள் ஆரோக்கிய யாகம், அம்மனுக்கு தீப ஆரத்தி, நாகருக்கு அபிஷேகம், நாகா் ஊட்டு, பொங்கல் வைத்தல், அம்மனுக்கு பொங்கல் ஊட்டுதல், தீப ஆரத்தி, அன்னதானம் உள்ளிட்டவை நடைபெற்றன.

கொல்லுா் தாய் மூகாம்பிகை கோயில் அா்ச்சகா் ராஜேஷ் நம்பூதிரி தலைமையிலான குழுவினா் மகா சண்டிகா ஹோமம் நடத்தினா். இந்நிகழ்வில் ஞானகுரு சிவசக்திசுவாமி மற்றும் பக்தா்கள் கலந்துகொண்டனா்.

Advertisement