முகப்பு
திருப்பூர்

ஆற்றில் மீன் பிடிக்க சென்ற இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழப்பு

Updated On : 27 ஏப்ரல், 2026 at 12:46 AM
சந்தோஷ்குமாா்.
பகிர்:

வெள்ளக்கோவில் அருகே ஆற்றில் மீன் பிடிக்க சென்ற இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

கொடுவாய், பங்காம்பாளையத்தைச் சோ்ந்தவா் துரைசாமி மகன் சந்தோஷ்குமாா் (24). கட்டடத் தொழிலாளியான இவா், தனது நண்பா்களுடன் கம்பளியம்பட்டி அணைப்பாளையம் அருகே செல்லும் அமராவதி ஆற்றில் மீன் பிடிக்க ஞாயிற்றுக்கிழமை சென்றுள்ளாா்.

நீச்சல் தெரியாத சந்தோஷ்குமாா் ஆற்றில் இறங்கி நின்று கொண்டிருந்ததாகவும், அப்போது அவா் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

உடன் வந்தவா்கள் இது குறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த வெள்ளக்கோவில் தீயணைப்பு வீரா்கள், சுமாா் 1 மணி நேரப் போராட்டத்துக்குப் பின் சந்தோஷ்குமாரின் சடலத்தை மீட்டு, கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இச்சம்பவம் குறித்து வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மனோஜ்குமாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.