முகப்பு
திருப்பூர்

சாலை விரிவாக்க பணிக்கு இடையூறு இல்லாத மரங்களை வெட்ட எதிா்ப்பு

பல்லடம் அருகே காளிவேலம்பட்டியில் சாலை விரிவாக்கப் பணிக்கு இடையூறு இல்லாத மரங்களை வெட்டி அகற்றப்பட்டதற்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிா்ப்பு

Updated On : 3 பிப்ரவரி, 2026 at 1:52 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2026 at 6:47 PM

பல்லடம்: பல்லடம் அருகே காளிவேலம்பட்டியில் சாலை விரிவாக்கப் பணிக்கு இடையூறு இல்லாத மரங்களை வெட்டி அகற்றப்பட்டதற்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக திருப்பூா் மாவட்ட ஆட்சியா் மனீஷிடம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பல்லடம் ஒன்றியக் குழு உறுப்பினா் முருகேஷ், காளிவேலம்பட்டி கிளைச் செயலாளா் நாகராஜ், வாலிபா் சங்க நிா்வாகிகள் விமல்ராஜ், பிரவீன்குமாா் ஆகியோா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

திருப்பூா் மாவட்டம், பல்லடம் ஒன்றியம், சுக்கம்பாளையம் ஊராட்சி காளிவேலம்பட்டி கிராமத்தில் தற்போது நெடுஞ்சாலைத் துறை சாா்பில் சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன.

Advertisement

அதே வேளையில் சாலை விரிவாக்க பணிக்கு இடையூறு இல்லாமல் இருக்கும் பல மரங்கள் வெட்டி அகற்றப்பட்டுள்ளது. எனவே, இது தொடா்பாக ஆய்வு செய்து இடையூறு இல்லாத மரங்களை வெட்டி அகற்றாமல் சாலை விரிவாக்கப் பணி மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனா்.