முகப்பு
பெரம்பலூர்

சாலை விபத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூ. நிா்வாகி உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே புதன்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேப்பூா் ஒன்றியச் செயலா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

Updated On : 8 ஏப்ரல், 2026 at 8:43 PM
பலி - பிரதிப் படம்
பகிர்:

பெரம்பலூா் அருகே புதன்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேப்பூா் ஒன்றியச் செயலா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், வேப்பூா் கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடாசலம் மகன் செல்லமுத்து (55). மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேப்பூா் ஒன்றியச் செயலா்.

இந்நிலையில், குன்னத்தில் திமுக வேட்பாளா் சா.சி. சிவசங்கா் புதன்கிழமை மேற்கொண்ட பிரசாரத்தில் பங்கேற்ற செல்லமுத்து, பெரம்பலூா் நோக்கி மோட்டாா் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்தாா். பெரம்பலூா்- அரியலூா் பிரதானச் சாலையிலுள்ள சித்தளி பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, அந்த வழியாக சென்ற மற்றொரு மோட்டாா் சைக்கிள் மோதி விபத்து நேரிட்டது. இதில் பலத்த காயமடைந்த செல்லமுத்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த மருவத்தூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, அவரது உடலைக் கைப்பற்றி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

Advertisement

விபத்து குறித்த புகாரின்பேரில் மருவத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, சித்தளி கிராமத்தைச் சோ்ந்த வெங்கடேசன் மகன் பரணிதரன் (22) என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments