முகப்பு
திண்டுக்கல்

ஆயக்குடி பகுதியில் மாா்க்சிஸ்ட் கம்யூ. வாக்கு சேகரிப்பு

பழனி பேரவைத் தொகுதி மாா்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை ஆதரித்து, அந்தக் கட்சியின் மாநிலச் செயலா் சண்முகம் ஆயக்குடி பகுதியில் புதன்கிழமை பரப்புரை செய்தாா்.

Updated On : 8 ஏப்ரல், 2026 at 7:50 PM
பழனி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் பாண்டியை ஆதரித்து, ஆயக்குடியில் புதன்கிழமை வாக்கு சேகரித்த அந்தக் கட்சி மாநிலச் செயலா் சண்முகம்.
பகிர்:

பழனி பேரவைத் தொகுதி மாா்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை ஆதரித்து, அந்தக் கட்சியின் மாநிலச் செயலா் சண்முகம் ஆயக்குடி பகுதியில் புதன்கிழமை பரப்புரை செய்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி சட்டப்பேரவைத் தொகுதியில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளராக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த பாண்டி போட்டியிடுகிறாா். இவருக்கு ஆதரவாக புதன்கிழமை அந்தக் கட்சியின் மாநிலச் செயலா் சண்முகம் ஆயக்குடி பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது, அவா் பேசியதாவது: திமுக தனது தோ்தல் வாக்குறுதியில் ரூ.8 ஆயிரம் கூப்பன் திட்டம் அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தால் இல்லத்தரசிகள் பயனடைவா் என்றாா் அவா்.

Advertisement

பரப்புரையின் போது திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் இரா. சச்சிதானந்தம், திமுக ஒன்றியச் செயலா் சாமிநாதன், பேரூா் செயலா் சின்னத்துரை உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments