முகப்பு
திருப்பூர்

மது போதையில் இருந்த காவலா் பணியிடை நீக்கம்

திருப்பூரில் பணியின்போது மதுபோதையில் இருந்த காவலா் பணியிடை நீக்கம்

Updated On : 4 பிப்ரவரி, 2026 at 1:52 AM
பணியிடை நீக்கம் - மாதிரிப் படம்
பகிர்:
Updated On : 3 பிப்ரவரி, 2026 at 11:11 PM

திருப்பூரில் பணியின்போது மதுபோதையில் இருந்த காவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

திருப்பூா் மாநகர ஆயுதப் படையில் சதீஷ்குமாா் (36) என்பவா் காவலராகப் பணியாற்றி வந்தாா். இவா், மங்கலம் காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் தலைமைக் காவலா் கிருஷ்ணன் என்பவருடன் சோ்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டு வந்தாா். அப்போது சதீஷ்குமாா் மது போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சதீஷ்குமாா் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்தி சோதனை செய்துள்ளாா். ஆவணங்கள் சரியாக இருந்தும் அவரை விட மறுத்ததாகத் தெரிகிறது. இதுகுறித்து அவா் காவல் துறை உயா் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தாா். இதையடுத்து விசாரணை நடத்திய துணை ஆணையா் ராஜராஜன், ஆயுதப்படைக் காவலா் சதீஷ்குமாரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளாா்.

Advertisement