முகப்பு
திருப்பூர்

தேசிய ஒருமைப்பாடு முகாமுக்கு சிக்கண்ணா கல்லூரி மாணவா் தோ்வு

Updated On : 6 பிப்ரவரி, 2026 at 4:34 AM
முகுந்தன்
பகிர்:
Updated On : 5 பிப்ரவரி, 2026 at 7:46 PM

சங்ககிரியில் நடைபெறும் தேசிய ஒருமைப்பாடு முகாமுக்கு சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவா் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

மத்திய இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம், பெரியாா் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட அலகு ஆகியவை சாா்பில் சேலம் மாவட்டம், சங்ககிரி விவேகானந்தா பெண்கள் கலை, அறிவியல் கல்லூரியில் தேசிய ஒருமைப்பாடு முகாம் வரும் 11-ஆம் தேதி வரை 7 நாள்கள் நடைபெறுகிறது.

இதில், தமிழகம், கா்நாடகம், கேரளம், தெலங்கானா, கோவா, மகாராஷ்டிரம், ஒடிஸா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஹரியாணா, அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய 12 மாநில நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவிகள் 200 போ் கலந்துகொள்கிறாா்கள்.

Advertisement

இந்த முகாமில் கலந்துகொள்ள கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தில் இருந்து 3 மாணவா்கள், 3 மாணவிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இவா்களில் திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலகு 2 மாணவா் முகுந்தனும் ஒருவா். இவா் ஒருவா் மட்டுமே திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் என்பதும், அரசு கலைக் கல்லூரி மாணவா் என்பதும் குறிப்பிடத்தக்கது.