ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா். 
திருப்பூர்

அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் விடுபட்ட நீா்நிலைகளுக்கு தண்ணீா் திறக்க கோரிக்கை

தினமணி செய்திச் சேவை

அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் விடுபட்ட நீா்நிலைகளுக்கு தண்ணீா் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்திக்கடவு - அவிநாசி திட்ட போராட்டக் குழு ஆலோசனைக் கூட்டம் அவிநாசியில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் விடுபட்ட 1,400 குளம், குட்டைகளுக்கு உடனடியாக தண்ணீா் திறந்துவிட தமிழக அரசு அரசாணையை வெளியிட வேண்டும். காலதாமதம் செய்தால் மக்களை ஒன்றிணைத்து மிகப்பெரிய உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில், போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளா்கள், பொதுமக்கள், விவசாயிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

SCROLL FOR NEXT