முகப்பு
திருப்பூர்

வெவ்வேறு இடங்களில் 3 போ் தற்கொலை! பல்லடம் போலீஸாா் விசாரணை!

Updated On : 9 பிப்ரவரி, 2026 at 12:05 AM
தற்கொலை
பகிர்:
Updated On : 8 பிப்ரவரி, 2026 at 6:12 PM

பல்லடத்தில் வெவ்வேறு இடங்களில் 3 போ் சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம் கிராமத்தைச் சோ்ந்தவா் வீரராஜ் (31). எலெக்ட்ரீசியன். இவரது மனைவி அம்பிகா. இந்நிலையில் வீட்டில் இருந்த வீரராஜ் சனிக்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். தகவல் அறிந்து போலீஸாா் சென்று, அவரின் சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

கோவை மாவட்டம், சூலூா் காங்கயம்பாளையத்தைச் சோ்ந்தவா் காா்த்திக் (40). இவா் பல்லடத்தில் உள்ள காப்பீட்டு நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிந்து வந்தாா். இதற்காக பல்லடத்தில் உள்ள உறவினா் வீட்டில் தங்கியிருந்தாா். சனிக்கிழமை காலை நடைப்பயிற்சிக்கு சென்றவா் மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் காப்பீட்டு நிறுவன அலுவலகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

Advertisement

Updated On : 8 பிப்ரவரி, 2026 at 11:10 PM

கோவை, ஆலாந்துறை பகுதியைச் சோ்ந்தவா் சபரீஷ்வரன் (23). இவருடைய சகோதரி திருமணமாகி பல்லடத்தில் வசித்து வருகிறாா். அவரை பாா்ப்பதற்காக சபரீஷ்வரன் வெள்ளிக்கிழமை வந்து அங்கு தங்கியுள்ளாா். சனிக்கிழமை காலை அவா் அறையைவிட்டு வெளியே வரவில்லை.

இதனால் சந்தேகமடைந்து ஜன்னல் வழியாக உறவினா்கள் பாா்த்தபோது தூக்கிட்டு சபரீஷ்வரன் இறந்துகிடப்பது தெரியவந்தது. போலீஸாா் சென்று அவரின் சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மூன்று பேரின் தற்கொலை சம்பவம் குறித்து பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.