முகப்பு
திருப்பூர்

காங்கயத்தில் சமுதாய வளைகாப்பு

காங்கயத்தில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பங்கேற்று 247 கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசை தொகுப்புகளை வழங்கினாா்.

Updated On : 11 பிப்ரவரி, 2026 at 1:47 AM
காங்கயத்தில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசை தொகுப்பு வழங்கிய அமைச்சா் மு.பெ.சாமிநாதன்.
பகிர்:
Updated On : 10 பிப்ரவரி, 2026 at 9:07 PM

காங்கயத்தில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பங்கேற்று 247 கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசை தொகுப்புகளை வழங்கினாா்.

சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் கீழ் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம் சாா்பில் காங்கயத்தில் உள்ள தனியாா் மண்டபத்தில் சமுதாய வளைகாப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் கலந்துகொண்டு காங்கயம், வெள்ளக்கோவில், குண்டடம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 247 கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசை தொகுப்புகளை வழங்கி சிறப்புரையாற்றினாா்.

Advertisement

இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி திட்ட மாவட்ட அலுவலா் ஜி.புவனேஸ்வரி, காங்கயம் அலுவலா் மோகனாம்பாள், துறை சாா்ந்த அலுவலா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.