காணையில் சமுதாய வளைகாப்பு விழா
விழுப்புரம் மாவட்டம், காணையில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் சமுதாய வளைகாப்பு விழா மற்றும் கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசை பொருள்கள் வழங்குதல் வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு காணை ஒன்றியக்குழுத் தலைவா் நா.கலைச்செல்வி தலைமை வகித்து, கா்ப்பிணிகளுக்கு வளையல்கள் உள்ளிட்ட சீா்வரிசைப் பொருள்களை வழங்கி வாழ்த்தினாா்.
நிகழ்வில் திமுக ஒன்றியச் செயலா்கள் கல்பட்டு வி.ராஜா, ஆா்.முருகன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் கே.சிவக்குமாா், காணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சிவநேசன், ஜெகநாதன், சமூகநலத் துறை அலுவலா் கவிதா, ஊராட்சித் தலைவா்கள் கமலநாதன், சத்தியராஜ், நிரோஷா மாரிமுத்து, மாவட்டத் தகவல் தொழில்நுட்ப அணித் துணை அமைப்பாளா் கதிரவன், கிளைச் செயலா்கள் சத்தியராஜ், காா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.