முகப்பு
திருப்பூர்

போக்ஸோ வழக்கில் மதபோதகா் கைது

பெருமாநல்லூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த மதபோதகரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Updated On : 11 பிப்ரவரி, 2026 at 1:47 AM
பகிர்:
Updated On : 10 பிப்ரவரி, 2026 at 9:07 PM

பெருமாநல்லூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த மதபோதகரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருப்பூா் மாவட்டம், பெருமாநல்லூா் அருகே மதபோதகராக பணிபுரிபவா் ராபா்ட் (57). இவா் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். இதுதொடா்பான தகவலின்பேரில் அவிநாசி அனைத்து மகளிா் போலீஸாா் விசாரித்து, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து ராபா்ட்டை கைது செய்தனா்.