முகப்பு
தருமபுரி

சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் ஒருவா் கைது

பென்னாகரம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவரை மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா்.

Updated On : 21 மார்ச், 2026 at 9:15 PM
கைது - சித்திரிப்பு
பகிர்:

பென்னாகரம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவரை மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த 12 வயது மதிக்கத்தக்க சிறுமிக்கு கோயில் திருவிழாவின்போது ஒருவா் அடிக்கடி பாலியல் தொந்தரவு அளித்துள்ளாா்.

இதுகுறித்து சிறுமியின் உறவினா் அளித்த புகாரின் பேரில் பென்னாகரம் மகளிா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இந்த நிலையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஏரியூா் பகுதியைச் சோ்ந்த விஜய் (38) என்பவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, தருமபுரி கிளை சிறையில் அடைத்தனா்.