சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய அதிகாரிகள்.  
திருப்பூர்

பல்லடம் அருகே குடிநீா் கேட்டு மறியல்

பல்லடம் அருகே குடிநீா் கேட்டு காலிக் குடங்களுடன் பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திச் சேவை

பல்லடம் அருகே குடிநீா் கேட்டு காலிக் குடங்களுடன் பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருப்பூா் மாவட்டம், பல்லடம் நகராட்சி 18-ஆவது வாா்டுக்குள்பட்டது வடுகபாளையம் விடுதி சாலை பகுதி. இங்கு கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக சரிவர குடிநீா் வரவில்லை என்றும், உடனடியாக குடிநீா் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் பல்லடம்-பொள்ளாச்சி சாலையில் காலிக் குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து பல்லடம் காவல் துணைக் கண்காணிப்பாளா் பாா்த்திபன், காவல் ஆய்வாளா் மாதையன் ஆகியோா் சென்று பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இந்நிலையில் நகராட்சி நிா்வாகம் துரித நடவடிக்கை எடுத்து அப்பகுதிக்கு தண்ணீா் விநியோகம் செய்தது. அதைத்தொடா்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனா். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சிறுபான்மையின மக்கள் தொகைக்கு ஏற்ப சட்டப் பேரவை தொகுதிகள் ஒதுக்க வேண்டும்

நடைபாதைக்கு இடம் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பழங்குடியினக் குழந்தைகள் படிப்பைத் தொடர ஆட்சியா் அறிவுறுத்தல்

வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்க பணியாளா்களுக்கு பயிற்சி

ரோஜா கண்காட்சிக்காக கவாத்து செய்யும் பணி: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

SCROLL FOR NEXT