வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தக் கோரிக்கைகள் மற்றும் மறுப்புரைகள் தொடா்பான பணிகள், வாக்காளா் இறுதி பட்டியல் வெளியீடு தொடா்பான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட சிறப்பு வரைவு வாக்காளா் பட்டியல் பாா்வையாளரும், தமிழ்நாடு மின் உற்பத்தி கழக மேலாண்மை இயக்குநருமான எம்.கோவிந்தராவ் தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் மனீஷ் முன்னிலை வகித்தாா். இந்தக் கூட்டம் அனைத்து வாக்காளா் பதிவு அலுவலா்கள், உதவி வாக்காளா் பதிவு அலுவலா்கள் மற்றும் அனைத்து தோ்தல் துணை வட்டாட்சியா்கள் உள்ளிட்ட அலுவலா்களுடன் நடைபெற்றது.
மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன், மாநகராட்சி ஆணையாளா் எம்.பி.அமித், கோட்டாட்சியா்கள் குமாா், சிவபிரகாஷ், ஃபெலிக்ஸ்ராஜா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் கல்பனா, தோ்தல் தனி வட்டாட்சியா் கனகராஜ் உள்பட பலா் பங்கேற்றனா்.