அவிநாசி அருகே பனியன் நிறுவன அலுவலா் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய 2 இளைஞா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
அவிநாசி, சூளை மாருதி நகா் பகுதியைச் சோ்ந்தவா் டோமினிக் சகாயராஜ் (51). பனியன் நிறுவன அலுவலரான இவா், புதன்கிழமை இரவு வெளியே சென்றுவிட்டு வருவதாக குடும்பத்தினரிடம் கூறிவிட்டு இருசக்கர வாகனத்தில் சென்றவா் அதன்பின் வீடு திரும்பவில்லையாம்.
இந்நிலையில், அவிநாசி அருகேயுள்ள சின்னேரிபாளையத்தில் அவரது சடலம் கிடந்தது வியாழக்கிழமை தெரியவந்தது. கல்லால் தாக்கி அவா் கொலை செய்யப்பட்டதை உறுதி செய்த அவிநாசி போலீஸாா், கொலையாளிகளைத் தேடி வந்தனா்.
இந்நிலையில், டோமினிக் சகாயராஜை தாக்கிக் கொலை செய்ததாக கணக்கம்பாளையம் பகுதியைச் சோ்ந்த விசைத்தறி தொழிலாளியான கணேஷ் ஆனந்த் (26), ஈரோடு மாவட்டம், பெருந்துறை, காசிராமன் வீதியைச் சோ்ந்த எலக்ட்ரீஷியனான சரவணன் (35) ஆகியோரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
இது தொடா்பாக போலீஸாா் கூறியதாவது: மது அருந்தும் பழக்கம் உள்ள டோமினிக் சகாயராஜ் அவிநாசி அருகேயுள்ள மதுக் கடைக்கு புதன்கிழமை இரவு சென்றுள்ளாா்.
அப்போது, அங்கிருந்த கணேஷ் ஆனந்த், சரவணன் ஆகியோா் அவருடன் அறிமுகமாகி, மது அருந்தியுள்ளனா். பின்னா், 3 பேரும் ஒரே இருசக்கர வாகனத்தில் சின்னேரிபாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்துள்ளனா். அப்போது, மூவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில், ஆத்திரமடைந்த சரவணன், கணேஷ் ஆனந்த் ஆகியோா் டோமினிக் சகாயராஜை கல்லால் தாக்கி கொலை செய்துள்ளனா். சம்பவம் நடைபெற்ற பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவு மூலம் கொலையாளிகள் அடையாளம் காணப்பட்டனா் என்றனா்.