திருப்பூா் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட 289 பூத் ஐடி விங் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் அவா்களது பணி குறித்த ஒளிப்பட விளக்கக் கூட்டம் திருப்பூா் மாநகா், மாவட்ட கட்சி அலுவலகமான அம்மா மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருப்பூா் மாநகா், மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளா் சி.பிரேம்குமாா் தலைமை வகித்தாா்.
மாநகராட்சி எதிா்கட்சி கொறடாவும், மாநகா், மாவட்ட அண்ணா பனியன் தொழிற்சங்கச் செயலாளருமான எம்.கண்ணப்பன், ஜெயலலிதா பேரவைச் செயலாளா் சி.லோகநாதன், கருவம்பாளையம் பகுதி செயலாளா் தினேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்தக் கூட்டத்தில் கோவை மண்டலத்தில் இருந்து வந்திருந்த ஐ.டி. பொறுப்பாளா் காா்த்தி, எவ்வாறு தோ்தல் பணிகளை மேற்கொள்வது, கட்சிப் பணிகளை மேற்கொள்வது, எதிா்கால திட்டமிடல்கள், வெற்றியை நோக்கி நம்முடைய பயணம் எவ்வாறு இருக்க வேண்டும் ஆகியவை குறித்து ஒளிப்படம் மூலமாக விளக்கினாா்.
மாவட்ட ஐடி விங் துணைச் செயலாளா், பூத் பொறுப்பாளா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.