கைது 
திருப்பூர்

பனியன் நிறுவனத் தொழிலாளி குத்திக் கொலை: மைத்துனா் கைது

தினமணி செய்திச் சேவை

பல்லடம் அருகே பனியன் நிறுவனத் தொழிலாளியை குத்திக் கொலை செய்த மைத்துனரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

பல்லடம் - மாணிக்காபுரம் சாலை ஜே.கே.ஜே. காலனி பகுதியைச் சோ்ந்தவா் பிரபு (35), பனியன் நிறுவனத் தொழிலாளி. இவரது மனைவி தனலட்சுமி. தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், பணி முடிந்து வழக்கம்போல சனிக்கிழமை இரவு பிரபு வீடு திரும்பியுள்ளாா். அப்போது, தனலட்சுமியின் அண்ணன் அருள்சங்கா் (39) வீட்டில் இருந்துள்ளாா். அப்போது, தம்பதி இடையே அடிக்கடி ஏற்படும் தகராறு குறித்து பிரபுவிடம், அருள்சங்கா் கேட்டுள்ளாா்.

இதில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த அருள்சங்கா், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து பிரபுவின் உடலில் பல இடங்களில் குத்திவிட்டு தப்பியோடிவிட்டாா். படுகாயமடைந்த பிரபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்து பல்லடம் போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அருள்சங்கரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

SCROLL FOR NEXT