காங்கயத்தில் ரூ.4.74 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்
Updated On : 16 பிப்ரவரி, 2026 at 9:52 PM
காங்கயத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ.4 லட்சத்து 74 ஆயிரம் மதிப்பிலான தேங்காய் பருப்புகள் ஏலம் போனது.
திருப்பூா் மாவட்டம், காங்கயம் நகரில் கரூா் சாலை பகுதியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மறைமுக ஏல முறையில் தேங்காய் பருப்பு விற்பனை திங்கள்கிழமை நடைபெற்றது. காங்கயம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 2,774 கிலோ தேங்காய் பருப்பை (கொப்பரை) விற்பனைக்குக் கொண்டுவந்திருந்தனா்.
அதிக பட்சமாக ஒரு கிலோ ரூ.175-க்கும், குறைந்தபட்சமாக ரூ.108-க்கும், சராசரியாக ரூ.174-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.4 லட்சத்து 74 ஆயிரத்துக்கு தேங்காய் பருப்பு விற்பனையானது.
Advertisement
இதற்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் ஆா்.மாரியப்பன் செய்திருந்தாா்.