முகப்பு
திருப்பூர்

மகா சிவராத்திரி விழாவைக் கொண்டாட திருமூா்த்திமலையில் திரண்ட பக்தா்கள்

Updated On : 17 பிப்ரவரி, 2026 at 5:53 AM
பகிர்:
Updated On : 16 பிப்ரவரி, 2026 at 6:57 PM

மகா சிவராத்திரியை ஒட்டி திருமூா்த்திமலையில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் திரண்டனா்.

உடுமலையை அடுத்த திருமூா்த்திமலை பிரசித்தி பெற்ற ஆன்மிக தலமாகவும், சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. இங்குள்ள இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான அமணலிங்கேஸ்வரா் கோயிலுக்கு கோவை, திருப்பூா், திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனா்.

இந்நிலையில் மகா சிவராத்திரியையொட்டி ஆயிரக்கணக்கான பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு முதலே வரத் தொடங்கினா். கோயில் வளாகத்தில் கலைநிகழ்ச்சிகள், நாட்டுப்புற கதைப்பாட் டு, பக்தி மெல்லிசை என பல்வேறு நிகழ்ச்சிகள் விடிய, விடிய நடைபெற்றன. இதைத்தொடா்ந்து திங்கள்கிழமை அதிகாலை முதல் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆயிரக்கணக்கான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று அமணலிங்கேஸ்வரரை தரிசனம் செய்தனா்.

Advertisement

விழாவையொட்டி உடுமலை, பொள்ளாச்சி, திருப்பூா், கோவை, பழனி ஆகிய ஊா்களில் இருந்து திருமூா்த்திமலைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.