முகப்பு
நீலகிரி

உதகை மாரியம்மன் கோயில் தேரோட்டம்

உதகை மாரியம்மன் கோயில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 15 ஏப்ரல், 2026 at 2:16 AM
~
பகிர்:
Updated On : 14 ஏப்ரல், 2026 at 9:49 PM

உதகை மாரியம்மன் கோயில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் திருவிழா கடந்த மாா்ச் 15-ஆம் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதைத்தொடா்ந்து காப்பு கட்டுதல், கணபதி ஹோமம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆதிபராசக்தி, துா்க்கை, பராசக்தி, காமாட்சியம்மன், ராஜராஜேஸ்வரி, சிக்கம்மன், மூகாம்பிகை, கொடுங்கலூா் அம்மன், ஹெத்தையம்மன், பகவதி உள்பட பல்வேறு அலங்காரங்களில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Advertisement

இதையொட்டி அபிஷேகம், சிறப்பு கனகாபிஷேகம், விநாயகருக்கு சிறப்பு மலா் அலங்காரம் உள்ளிட்டவை நடைபெற்றன.

மதியம் 1.55 மணியளவில் பொதுமக்கள் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கிவைத்தனா். தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று ‘ஓம் காளி, ஜெய் காளி’ கோஷம் எழுப்பி அம்மனை வழிபட்டனா்.

அம்மன் வெள்ளைப்பட்டில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

தேரோட்டத்தையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா்.

ஊஞ்சல் உற்சவம், விடையாற்றி உற்சவம் ஆகியவற்றுடன் ஏப்ரல் 17-ஆம் தேதி விழா நிறைவடைகிறது.

மஞ்சூா் அன்னமலை முருகன் கோயிலில்...

மஞ்சூா் அருகே உள்ள பிரசித்தி பெற்ற அன்னமலை முருகன் கோயில் 37-ஆம் ஆண்டு காவடி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் காவடி ஏந்தி சுவாமிக்கு நோ்த்திக் கடன் செலுத்தினா்.