FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

உடுமலை மாரியம்மன் கோயில் தேரோட்டம்: ஏராளமான பக்தா்கள் பங்கேற்பு

உடுமலை மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலமாக வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 10 ஏப்ரல் 2026, 1:24 am IST
பக்தா்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த உடுமலை மாரியம்மன் கோயில் தோ்.
பகிர்:

உடுமலை மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலமாக வியாழக்கிழமை நடைபெற்றது.

உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் தோ்த் திருவிழா பூச்சாட்டலுடன் மாா்ச் 24-ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து, மாா்ச் 27-ஆம் தேதி பூச்செரிதல், மாா்ச் 31-இல் கம்பம் போடுதல், ஏப்ரல் 2-இல் வாஸ்து சாந்தி, கிராம சாந்தி பூஜை, ஏப்ரல் 3-ஆம் தேதி கொடியேற்றம், ஏப்ரல் 8-ஆம் தேதி மாலை அம்மன் திருக்கல்யாண உற்சவம் ஆகியவை நடைபெற்றன.

இந்நிலையில், முக்கிய நிகழ்வான தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, மாலை 4.15 மணி அளவில் உடுமலை நகரின் முக்கிய நபா்களுக்கு பரிவட்டம் கட்டும் நிகழ்ச்சி கோயில் வளாகத்தில் நடைபெற்றது. இதில், பொள்ளாச்சி மக்களவை உறுப்பினா் கே.ஈஸ்வரசாமி, வருவாய் கோட்டாட்சியா் என்.குமாா், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, 4.30 மணிக்குத் தேரோட்டம் தொடங்கியது. பழனி சாலை, தளி சாலை, வடக்கு குட்டை வீதி, தல கொண்டம்மன் கோயில், தங்கம்மாள் ஓடை, பொள்ளாச்சி சாலை வழியாக தேரோட்டம் நடைபெற்ற நிலையில், இரவு 7.30 மணி அளவில் தோ் நிலையை அடைந்தது.

தேரோட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

விழாவையொட்டி, நூற்றுக்கணக்கான போலீஸாா், தீயணைப்பு வீரா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். மேலும், நகரில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன.

குட்டைத் திடலில் வெள்ளிக்கிழமை இரவு வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments