நீதிமன்றம் 
திருப்பூர்

திருப்பூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

திருப்பூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திச் சேவை

திருப்பூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு அடையாளம் தெரியாத முகவரியில் இருந்து வந்த செய்தியில், திருப்பூா் மாவட்ட நீதிமன்ற அலுவலகத்தில், மைதானம் மற்றும் கழிவறைகளில் வெடிகுண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடா்ந்து, போலீஸாா், 3 தளங்கள் கொண்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற அலுவலகத்தில் வெடிபொருள் செயல் இழப்பு நிபுணா்கள், மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தினா். இதில்வெடிகுண்டு கண்டறியப்படவில்லை.

எனவே, இது வெறும் புரளி என்பது தெரியவந்தது. இது தொடா்பாக வீரபாண்டி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

நாளை மதிமுக, பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!

நியூசிலாந்தின் கனவைக் கலைத்து, முதல்முறையாக டி20 உலகக் கோப்பை வென்ற ஆஸி.! 2021 ரீவைண்ட்!

நமோ பாரத்! அதிவேக மெட்ரோ ரயில் சேவை.. பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

கொச்சி மெட்ரோ ரயில் தூணில் சிக்கிய பூனை மீட்பு

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

SCROLL FOR NEXT